Wednesday 17 December 2014

நேசத்தின் காதல் துளிகள்-24

இடைவெளி இல்லாமல்
இதழ்களின் மேல்
இரவு முழுவதும்.....
பனித்துளி
முத்துக்களாய்.....
முத்தங்களை தந்து செல்கிறாயடி
ச(த)ந்திரக் காதலே........


ஒயாமல் பேசும் என் வாய்
ஊசி நூல் கொண்டு
தைக்கப்படுகிறது
காதலாய் நீ என்னுள் வந்த பின்


ஓசையில்லாமல் நீ அருகில்
வரும்போதெல்லாம்.......
பேரிரைச்சலோடு
பொங்கிப் பெருகி வழிகிறது
என் காதல்..எனக்குள்.


கடமைகள் எனும்
கலங்கரைவிளக்கம் வழியே
திரும்பாமல்......
கடல் கடக்கும் காதலே
உயிர் ஒளி ஏந்தி
கரையில் காத்திருக்கும்..நான்
உன்னில் கரை சேர்வது
எப்போது....???



இதழ் தூரிகை கொண்டு
நீ வரையும் ஒவியமாய்
பூக்கிறது..என் கன்னத்தில்
உன் முத்தங்கள்..


நிறக்குருடாகிப்
போகிறேன்
நீ அருகில் இல்லாத
நேரங்களில்......


ஆறாத ரணங்களை
வலி குறையாமல்...
வடுக்களோடு
வாழ்க்கை முழுவதும்
தராளமாய்
வழங்கிச்செல்கிறது....
பருவமறியாது பூத்த
முதல் காதல்........!


வானத்தின் வண்ணத்தை
கடன் வாங்கி என்னுள் நிறைந்தவளே........
உன் வருகை எதிர்பார்த்து
உன் நிறம் மாற்றி காத்திருக்கிறது
என் நினைவிலைகள்...


கரடுமுரடான வழியில்
இஷ்டப்பட்டு...
நஷ்டப்படாமல்......
கஷ்டப்பட்டு...
ஏறிக்கொண்டுள்ளது
நம்..பூனைக்குட்டி வாழ்க்கை


கரங்களுக்குள் அணைத்து
முகம் இழுத்து
முத்தமிடும் நொடியில்.....
அதெப்படி..சரியாக ....
கலைந்து போகிறாய்
கனவே.......!!!!!!


முத்து முத்தாய்
வேர்த்துப்போகிறேன்
மாசக்கணக்கில்
சுமந்த காதலை
உன்னிடம் பிரசவித்த வேளையில்...


அன்பில்...காதலாய்
காதலில் குழந்தையாய்
தூங்கிக் கொண்டிருக்கும்
அழகை.........
இமைக்காமல் ரசித்துக்கொண்டுள்ளது
விழித்துக்கொண்டிருக்கும்
அழகு...


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..