Saturday 22 August 2015

புஷ்பாஞ்சலி

பக்திநிறை மேன்மைக்கு பவித்திர துளசி
வெற்றிநிறை வாழ்விற்கு மஞ்சள் செவ்வந்தி

வேள்வி தத்துவ அமைதிக்கு வெள்ளை செவ்வந்தி

செல்வ வளம் கொழிக்க நாகலிங்கம்
நிர்மல மனம் காக்க நாட்டு ரோஜா

நிறைந்த பிரியம் தர பட்டன் ரோஜா

சத்திய நேர்மைக்கு செவ்வரளி
சாநித்திய முன்னேற்றத்திற்கு பச்சை முல்லை

நீடித்த வாழ்வு வழங்க வாடாமல்லி

அழகுபூக்கள் எடுத்து ..அடுக்குகுலையாமல் அலங்கரித்து
அன்னை நின் மலர்ப்பாதங்களில்

ஆனந்தமாய் சமர்பித்து ...அருள்வேண்டி உருகி
நிற்கிறோம் தாய்மையே

அணைத்து காத்து உடனிருப்பாய் மேன்மையே...!!!!!!!!!!

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி..பரமே..!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..