Sunday 23 August 2015

இருதய வலியாய் ...இமையடிக்கிறது


தொட்ட பிரியங்களை
தொடுத்த சிரிப்புகளை

வளர்த்த வாதங்களை
வம்பிழுத்த அன்புகளை

விரல் பிடித்து
எழச்செய்த எண்ணங்களை

முத்தென என்னில் மட்டும் நீ
பகிர்ந்த பாரங்களை

தாங்கிய தோள்களும்
தவித்து ஆறுதல் தந்த வார்த்தைகளும்

இன்றென எனக்குள்
இருதய வலியாய் ...இமையடிக்கிறது

உனக்குள் ....??

உயிரோடுகிறதா

உடைந்த கண்ணாடி நட்பின்
திசையில்லா நாட்காட்டி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..