Sunday 3 May 2015

தாய்மையான பிரியமாய்

தாயின் மொழியாய்
தாய்மையான பிரியமாய்

தமையன்யெனும் சொந்தமாய்
தன்னிகரில்லா அன்பாய்

பாச விழியேந்தி ..பவித்ர மனமுடன்
இமையணைத்து எங்களை காக்கும்

எங்கள் அண்ணாவிற்கு..... கவிஞர் மணி பாரதி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கருணையும் கனிவும்
இரு விழிகளில் பார்வையாய் தாங்கி
பார்க்கும் உயிர்கள அனைத்திடமும்..அன்பு பாசமாட
உங்களால் மட்டுமே முடியும் அண்ணா

எதை எதையோ எதிர்பார்த்து எல்லோரும் இங்கு சுயநலமாய் வந்து ஓட.......எதையுமே எதிர்பார்க்காமல்
பழகும் மனங்களிடம்....அமைந்திருக்கும் நல்குணம் மட்டுமே கண்டு குளிர்வித்து அன்பாடும் பாச நதி நீங்கள்

தங்களின் மனத்திற்கும் தன்னிகரில்லா கண்ணியத்திற்கும்
உயிராடும் சொந்த நட்புகள் உங்கள் மேல் கொண்ட பிரியத்திற்கும் ..நல் சான்று
உங்களை அவர்கள் மீட்டு கொண்டு வந்த பிரார்த்தனைகள்

வழிந்தவிழி துடைக்காமல் நான் இட்ட பதிவில் ..எத்தனை நட்புள்ளங்கள் ..இங்கு வந்து என் தோளணைத்து என் அண்ணா விழிதிறக்க ஒருநொடி மனப் பிரார்த்தனை செய்தார்கள்./..
இஃதே அவரின் அன்பு நேச..அழியா சேமிப்பு

பாசவிரல் பிடித்து நடக்கையில்...உரிமைக் கொட்டு வைத்து
எம் மொழி திருத்துக்கையில் அண்ணா என் ஆசான்...

அம்மா என்றழைத்து ...சொந்தம் பரிமாறி
உரிமை நிகழ்வாடுகையில்..நான் அவரின் தாய்.........

பிறவிதோறும் தொடரவேண்டும் இந்த ஆயுள் சொந்தமென
ஆன்மீக அன்னை வணங்கி...வேண்டி

வாழ்த்த மொழியின்றி ....நெகிழ்கிறேன்..அண்ணா
என்றும் நீங்கள் வாழ்வேண்டும்...
எங்களை வாழ்த்தி ஆசீர்வாதம் செய்ய

இன்று உங்கள் திருநாள்......என்
மனம் நிறைந்த மகிழ்வு நாள் அண்ணா

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..