Thursday 18 December 2014

உண்ட விசுவாசத்துக்காய்.



நிரந்தரமாய் உறங்கிய பின் 
நாள் குறித்து வைத்து 
மறந்து போகின்றன 
எத்தகைய ஆறறிவு உறவுகளும்....... 
அன்பாய் காலைச் சுற்றிய ஐந்தறிவு மட்டும்....
 நம்மிடம் பிடிசோறு உண்ட விசுவாசத்துக்காய்........ 
விட்டுப் பிரிய மனமில்லாமல் 
கடைசி வரை கண்ணீருடன் 
நம் கல்லறையை சுற்றி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..