Thursday 18 December 2014

நேசத்தின் காதல் துளிகள்-30

என் ரகசியம்
காதல் ஆனது
உனக்கு.......
:
:
அன்றைய நாளிதழ்
ஆனது ஊருக்கு.



உன் உதடுகள்
உச்சரிக்கும் மொழியை
இசையாக்குகிறது
என் காதல்.......


கனவுக்குள்ளும்....
நிகழ்வுக்குள்ளும்
இரவும்...
பகலுமாய்...
நமை இழுத்துச் செல்கிறது
காலம்..


எனக்காக நீ அடி
வாங்கி ரத்தம்
சிந்திய இடத்தில்......
வலிகளோடு வரைகிறேன்
நமக்கான காதலை..


என்னை உன் உயிரோடு
இறுக்கி கட்டி ....
மூணு முடிச்சு
போட்டுச் செல்கிறது
காதல்.....


தலைமேல் அடித்து
சத்தியம் செய்கிறேன்
நானானவள் நீ.....
நீ இல்லையெனில்
நான் உயிரோடு இருப்பேன்
ஆனால் நிச்சயமாய்
உயிர்ப்போடு ...........
இருக்க மாட்டேன்...


நீ வெட்டி எறிந்த
நகம் எடுத்து
ஒளித்து வைத்தேன்
என் இரவுகளில்.....
:
:
அது என் கனவுகளில்
உலாப் போகிறது
வெள்ளி நிலவாய்.


நீ விட்டுச் சென்ற
இடத்திலேயே
உறைந்து கிடக்கின்றன
என் உலகின் பயணங்கள்..


கள் நிறைந்த உன் மதுக்குடத்தை
களவாடும் வண்டுகளின் கண்களிலிருந்து
இதழ்கள் சுருட்டி
ஒளித்து வைக்கிறது
பருவம்...


அழகழகாய் உன்னை
என்னில் வரைந்து
ஒளி மறைத்த ஓவியமாய்
போனது ஏனடி...என்
ஊதாப் பெண்ணே


உன்னையும்......
என்னையும்.....
[மஞ்சள்,,சிவப்பு,,ஊதா,பச்சை என]
கலர் கலராய்
கயிறு கட்டி
இணைக்கிறது காதல்


எனை ஆளுமை செய்ய
எங்கோ பிறந்து
வளரும் தேவதையே
உனக்காக காத்திருக்கிறது
முத்துக்கள் பதித்த
என் இளமை சாம்ராஜ்யம்.....
காதல்கிரீடம்..ஏந்தி..


சோகமாய் இருக்கும்
என்னை
சிரிக்க வைக்க
நீ செய்யும் கோமாளித்தனங்களைப் பார்க்கும் போதெல்லாம்....
பாசமாய் ஓடி வந்து
உனை முத்தமிட்டு
குழந்தையாய்
கட்டிக்கொள்கிறது
என் காதல்..........



கலவை வண்ணங்கள் கொண்ட
என் வானவில்லே...
உனை எதிர்பார்த்து
கொட்டும் மழையில்
குடை பிடித்து
காத்திருக்கிறது
என் குழந்தைக்காதல்....


உன் வருகைக்காக ..
உன் வண்ணங்களை
தாங்கி என் வழிகளில்
வரிசையாய் அணிவகுத்து
விழித்திருக்கிறது
மின்னலடிக்கும் என் காதல் நினைவுகள்.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..