மாம்பழக் கருப்பாய்
பனிமுத்து
பருக்கள்
தவிர்த்து
உரசிய மஞ்சள்
அரைத்துப் பூசி
ஆள்காட்டி விரலால்
மை குழைத்து
விழி தீட்டி...
வெளுப்பில்லாத
மாம்பழக் கருப்பாய்
பருவம் மின்ன
பறித்து போட்டு
மண் கழுவிய கிழங்காய்
மனம் கிள்ளிப் போகிறாயடி
20களில் நடமாடும்
இரட்டைக் கிளவியே
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..