Sunday, 14 December 2014

மாம்பழக் கருப்பாய்

பனிமுத்து
பருக்கள்
தவிர்த்து
உரசிய மஞ்சள்
அரைத்துப் பூசி

ஆள்காட்டி விரலால்
மை குழைத்து
விழி தீட்டி...

வெளுப்பில்லாத
மாம்பழக் கருப்பாய்
பருவம் மின்ன

பறித்து போட்டு
மண் கழுவிய கிழங்காய்

மனம் கிள்ளிப் போகிறாயடி
20களில் நடமாடும்
இரட்டைக் கிளவியே


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..