கோப கோபமாய்
கொஞ்சி கொஞ்சி
பேச வேண்டும்...
வேண்டாத மழையில்
வேண்டுமென்றே
நனைந்து வந்து
இருமலோடும்
தும்மலோடும்
என் இரவுகளை
கவலையோடு விழிக்க
செய்ய வேண்டும்....
உடம்புக்கு ஆகாததை எல்லாம்
கெஞ்சி கெஞ்சி
சமைக்கச் சொல்லி
சப்புக் கொட்டி சாப்பிட்டு விட்டு
இருநாட்கள் உண்ணாவிரதம்
இருக்க வேண்டும்.........
ஆசை ஆசையாய்
பழங்கதைகள் பேசி
பேசும் போதே சண்டை போட்டு
என்னை சீண்டி சீண்டி
சிணுங்க சிணுங்க
கேலி செய்து.....முகம் கோணி
அழப் போகும் வேளையில்
சரணாகதியாகி சிரிக்க வைத்து...
கர்ப்ப கிரகம் முதல்
கல்லறை வரை....
விடாது கை பிடித்து
நடக்க வேண்டும்
என......
இளமை பழுத்த
நரையில் ....
கிழவன் கிழவியாய்
தொட தொட
திகட்டாத உறவில்
தொட்டு தொட்டு
திளைத்து
முற்றிய வயதில்
முத்திய காதல்
வாழ்வு வாழ.....
இப்போதே
வரிசையாய்
பட்டியலிட்டுக்
வசதியாய்
பதுக்கிக் கொள்கிறாய்
உனக்குள்
என்னை..........
....

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..