Friday, 12 December 2014

ஈகோ மலை

ஓங்கி வளர்ந்த
கடும் பாறை

ஈகோ மலையின்
உச்சியில் நம்மை
ஏற்றிப் பிரித்து

எதிர்மறையாய்
சிலுப்பிக் கொண்டு
நிக்க வைக்கிறது

நீயா...

நானா....

என்று
ஜெயிப்பதற்க்காகவே
வாதிடும்
ஆளுமைகளுக்குள்
சிக்கித் தவிக்கும்

வாய் செத்துப்போன
நம் அன்பு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..