Sunday, 14 December 2014

நடிப்பதுதான் ஏனோ...??

உன்னை மீறி
நான் எதுவும்
செய்யப் போவதில்லை

என் விருப்பங்களை நீ
நிறுத்தி வைக்கவும்
ஆசைப்படுவதில்லை

இருந்தாலும்
நான் கேட்டதும்
உடனே மறுத்து
ஓராயிரம்
அறிவுரைகள் கூறி
ஏக்கமாய் எனைத்
தவிக்க வைத்து

அதிகார வேலியிட்டு
அனுமதி மறுப்பது போல்
நாடக மேடையமைத்து

நடிகர் திலகமாய்
நடிப்பதுதான் ஏனோ...??

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..