Friday, 12 December 2014

விட்டுப் பிரிந்த நினைவுகள்

ஒற்றைக் கட்டிலில்
கால் முடக்கி
நான் படுத்த போதும்

பக்கத்திலேயே வந்து
இடித்துக் கொண்டு
என் மேல்
படுக்கை விரிக்கிறது

விட்டுப் பிரிந்த
அவளின் நினைவுகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..