Sunday 15 March 2015

யார் நீ.

கேட்காமல்
தந்து

சொல்லாமல்
செய்து

கலங்கும் முன்
களை வெட்டுகிறாய்

என்ன
வேண்டுன் என்னில்..??/
வினவ

சிரித்து .......உன்
பார்வை வட்டத்திலேயே
வைக்கிறாய்
நெருங்கி கட்டி
மூச்சு இறுக்காமல்

யார் நீ.......என

சட்டென தோளணைத்து
இப்ப சொல் ..என்கிறாய்

தோழன் என புரிய

நேசத்தோடு
கசிகிறேன்....வார்த்தையின்றி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..