Friday 27 March 2015

பிள்ளை பிறைநிலா..

இந்தா
வைத்துக் கொள்

வேண்டாம்
எனக்கு கொடு

என
இல்லாத ஒன்றை
இருப்பதாய் பரிமாறி

கொடுத்து
வாங்கி நிறைந்து
விளையாடி மகிழ

விரல் பிடித்து
அவள் உலகம்
அழைக்கிறாள்

விடுமுறைக்கு வீடுவந்த
பிள்ளை பிறைநிலா..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..