Tuesday 31 March 2015

அறுங்கோண தித்திப்பு வீடு

இலையுதிர்ந்த கிளை
ஒய்யாரத்தில்
ஒன்று வந்தமர
ஓடி வந்து சுற்றி
ஒட்டிக் கொண்டது
ஓராயிரம்

கலைக்க மனமில்லாமல்
வேடிக்கை பார்க்க

கண நேர சுறுசுறுப்பில்
கச்சிதமாய்
உருவாகிறது

ஆயுள் அமிர்த

அறுங்கோண
தித்திப்பு வீடு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..