Friday 20 March 2015

வம்ச விழுதுகளே

படிப்பு என்னவென்று
அறியாத பால்யத்தில்
பள்ளி நுழைந்து...

ஒன்று இரண்டாக
ஈரைந்து பத்தாக
பட்டை தீட்டிய
அறிவோடு
திருப்புமுனை தேடி
பேனா முனை ஏந்தும்

பத்தாம் வகுப்பு
பருவ நாத்துகளே

எண்ணிய யாவும் திண்ணியவாக
எடுத்தவினாதாளில் கவனம் பதித்து
கற்ற மொழி கண்முன் வந்தாடி
கருத்து நிறை எழுத்தாய் நிறைந்திட

கூர்தீட்டிய கோமகன் ஆசானும்
கூட இருந்து இமைகாத்த பெ ற்றோரும்
அகம் மகிழ

வெற்றியணைத்து வேரூன்றுங்கள்

வம்ச விழுதுகளே

இனிய வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..