Sunday 15 March 2015

ஆதூரமாய் வந்த ஆதாரமே

ஆயுள் தந்தவளே
ஆதூரமாய் வந்த ஆதாரமே

நேசமென என்னை நிறைந்தவளே
பாசம் தரும் பவித்ர ஆளுமையே

எது என் வாழ்வென ...திசைதெரியாத சுழலில்
நீயென நான் நிறைய எத்தனிக்க,..இரு என
..உன் சாதகர் அனுப்பி
தலை ஆசீர்வாதம் தந்து...
காத்திருக்கிறது ..உன் வாழ்வும் வழியும்
என வழிகாட்டி..இதுவரை என் பயணத்தில்
இமையென உடன் வந்து பாதுக்காகும்

ஆனந்த அன்னையெனும் ..என் அவனி மீட்சியே

சரணம் சரணம்...பரிபூரண சரணம் நின் பாதமலர்களில்

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே...!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..