Tuesday 31 March 2015

பகுத்தறிவு பகலவன்

பகுத்தறிவு பகலவன்
சாதீய தீ
சமுதாய முன்னேற்ற வேள்வி
பிச்சை புகினும்
பிடித்த கொள்கை விடாதவர்

வைக்கம் சிங்கம்
பெண்ணிய விடுதலை சுவாசம்
என

அடிமை கூன் நிமிர்த்திய
ஆளுமைதேச
தொண்டுகிழவருக்கு
அடைமொழிகள் குமிந்தாலும்

கைம்பெண் அவலம் தடுக்க
மஞ்சநூல் சரடை
முற்போக்காய் எதிர்த்து
கைதட்டி கையெழுத்து
கல்யாணம் செய்வித்தவரே தவிர

கட்டிய தாலி அறுக்க சொல்லும்
மன உணர்வு பாதிப்புகளை
என்றும் பயிர்வித்தவர் அல்ல....

ஆதலாலே
அவர்..என்றும்

பெரியார்...

அவர் வழி வருவதாய்
சொல்லும் நீர் _________....????????

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..