Tuesday 17 March 2015

தேவதைக் கனவு வாழும் நூலாம்பூச்சியவள்

நூலாம்படை வீட்டில்
தேவதைக் கனவு
வாழும்
நூலாம்பூச்சியவள்

இணை ரசனையில்லா
இணையிலும்

சிலிர்க்க மறந்ததில்லை
அவளின்
உணர்வுக் கொம்பு

சத்தமிட்டு பேசாமல்
ஓங்கி சிரிக்காமல்
நிமிடத்தில் மவுனமாய்

நிகழ்வு
தொலையும்

பெண்ணடிமையில்லா
கற்பனை
சிறகெல்லையே....

வரம் வாங்கி வந்த
அவளின்
வாழ்வூறல் சொர்க்கம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..