Sunday 15 March 2015

நேச நன்றி நலமாடல்

நேச நன்றி நலமாடல் தோழமைகளே.........

அன்பில் நெகிழ்கிறது மனம்..நேசபிரியங்களுக்கு இத்தனை சக்தியா..

வேரோடு.... வேறாய் புரட்டிப் போகிறது என்னை எப்போதும்...எந்த வித எதிர்பார்ப்புமில்லாமல்..முகநூல் தொட்டு
அமைதியின் ஆறுதலாய் வந்த எனக்கு

எழுத்து சாளர நீர் பிரியம் திறந்து
அலைகடல் துள்லும் மீனாய்..ஆனந்த நட்புகள் தந்தது இவ்விடம்..
மனசார ,,எத்தனை பிரிய வாழ்த்துக்கள் நட்புகளே

உங்களின் மனவாழ்த்தில் நிறைவாய் இனிமையாய்..நெகிழ்வாய்.....

ஆழ் சமுத்திர பிரியத்தில்,,ஆடிக் குதித்தாடும் தங்கமீனாய்
ஆனந்த விழி நனைகிறது உயிர்

நன்றி எனும் சரக்கொன்றை உர வார்த்தையை...சரமாய் தொடுக்கிறேன்
தங்கள் வேரடியில்...இதைத்தவிர என்ன உண்டு
தவம் செய்து ..தாங்கள் சூழ வரம் பெற்ற என்னிடம்

அரும்பெரும் வரம் தந்த அன்னைக்கும்....

திருவிழா பிரியமாய்..
திருநாள் மகிழ்வேந்தி ..வாழ்த்த இணைந்து கைகோர்த்த
முகமறிந்த ..முகமறியாத தோழமை நேசங்களுக்கும்

குவிந்த கரங்களுடன்...
என் மனம் கனிந்த நன்றி நன்றி நன்றி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..