தாய் வயிறு
தடவி தடவி
எப்ப வருவான் என்று
காத்திருந்த தம்பியை
பூ பந்தாய் சுருட்டி
கையில் தர
பயப்பார்வை பார்த்து
தயங்கி அருகே வந்து
சுண்டு விரல் தீண்ட
இமை சுளித்து
சிணுங்கலாடும் சீண்டலில்
சட்டென்று நடுங்கி
விட்டு ஓடி
ஒளிந்து ஓரு கண்ணால்
எட்டிப் பார்க்கிறாள்
அன்பு அக்கா குழந்தை
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..