Saturday 14 March 2015

அன்பு அக்கா குழந்தை


தாய் வயிறு
தடவி தடவி

எப்ப வருவான் என்று
காத்திருந்த தம்பியை

பூ பந்தாய் சுருட்டி
கையில் தர

பயப்பார்வை பார்த்து
தயங்கி அருகே வந்து
சுண்டு விரல் தீண்ட

இமை சுளித்து
சிணுங்கலாடும் சீண்டலில்

சட்டென்று நடுங்கி
விட்டு ஓடி
ஒளிந்து ஓரு கண்ணால்

எட்டிப் பார்க்கிறாள்

அன்பு அக்கா குழந்தை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..