Tuesday 3 March 2015

பூக்களின் செல்லத் தோழி

அன்னையின் பிரியமாய்
ஆனந்த செல்வமாய்
தேவதை ஆசீர்வாதங்களுடன்
தெய்வம் ஒன்று ..... Anjana Jayaram Rao

வரதவமிருந்த என் சகோதரி Indhira Jayaram Raoகருநிறைந்து
உரு உதித்த உற்சவதிரு நாள்

எத்தனை வேண்டுதல்...எத்தனை வரங்கள்
எத்தனை கோவில்கள் எத்தனை காணிக்கைகள்

அத்தனை இறையும் ஒருசேரக் கண் திறந்து
ஆயுள் கோடி அள்ளிவழங்கி அறிவுநிறை அழகுசிற்பமாய்
அஞ்சுகுட்டியை மண்பிறக்க மடிநிறைத்ததோ

பிரியங்களின் ராணி.....
பூக்களின் செல்லத் தோழி
புகைப்படங்களின் தீராக் காதலி

திறமைகளின் தேடல் தேவதை
என் சகோதரியின் குறும்புப் பிள்ளை

எங்கள் சாம்ராஜ்யத்தின் தங்க மாகாராணி

என்றே சொல்லலாம் பார்க்காமலே சித்தி என்று கழுத்து கட்டி பாசமாடும் கனிவுப் பொன் மகள்

இவளின் உயிர்ப்பான ஒளிப்படங்களில்
நான் மொழி பேசியவை அதிகம்....

அள்ள அள்ள குறையா அட்சயப்பாத்திர நிம்மதியேந்தி
அவனி வந்த மணிமேகலை மரகதமே

வெற்றி புகழ்மாலை தோளேந்தி ...வீரத்திருமகளாய்
கல்விகேள்வி செல்வங்களுடன்
எங்கள் வீட்டு திருமகள் வலம் வர

அன்னை வேண்டி வாழ்த்துக்கிரேன் செல்லம்

வாழ்க வாழ்க வாழிய பல்லாண்டு நீ

பிரிய முத்தங்களுடன்
அன்பு சித்தியின் ஆசை வாழ்த்துக்கள்.....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..