Wednesday 30 September 2015

உயிர்தந்தவளே


சட்டம்போட்ட
புகைப்படமாய்
சடுதியில்
உறைந்துவிட்டாய்

இயற்கையெனினும்
இயல்பாய்
ஏற்றுக்கொள்ள முடியாமலே
தவிக்கிரது தாளாத மனம்

எப்படி என்னைவிட்டு
போனாய் என்றே

நிகழ்வுகளை
கற்றுக்கொடுத்துவளே
நிமிடங்களை கடக்கும்
சக்தியும்

நீயே தா..

உயிர்தந்தவளே
உடனிரு எப்போதும்
நிழலாய்

ம்மா..........

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..