Wednesday 30 September 2015

சிந்தனை மனிதன்

நீண்ட கரிய கண்களில்
நீர் வழிய

தாயிடம் இருந்து பிரித்து
அழைத்து வந்து

விபூதி பட்டையுடன்
விலங்கிட்டு
கோல் குத்தி
வலி தந்து

கடவுளென
வணங்கி
வரம்கேட்பான்

சீர் கெட்ட
சிந்தனை மனிதன்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..