Wednesday 30 September 2015

பட்டணப் பொழைப்பில்


இனிப்பு கொடிக்காய்
மரமேறிப் பறித்து

நீட்டிய
முள்கிழித்த காயம்
அம்மாவிடம் மறைத்து

வெள்ளை விதை
வெளி வராமல்
உறித்து
மாடத்தில் வைத்து

விருந்தாளி வரவுக்கு
சகுனம் பார்த்த

காலமெல்லாம்

துவர்ந்த
கதையானது

மனுசர் அண்டாது
மறு ஜென்மமாகிப்போன

பட்டணப் பொழைப்பில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..