Friday 4 September 2015

பவித்திர வாழ்வு கொஞ்சும்

சொக்கரும் மீனாட்சியும்
சொர்க்க வாழ்வு தந்து
சொந்தமணைத்த பந்தங்களாய்

பாசநிம்மதியோடு
பவித்திர வாழ்வு கொஞ்சும்

பாசமிகு சகோதர தம்பதிகளுக்கு
Natarajan Somasundaram & Sivakamasundari Natarajan
இனிய மணநாள் வாழ்த்துக்கள்

அமையவேண்டும் இஃதென வாழ்வென
ஜென்ம தவம் மேற்கொண்டு
இமையணைத்தோர் பலர் இருக்க

தில்லையம்பலத்தார் திருக்கரம் பற்றி
அவனிவெல்ல ..அழகுநேசமேந்தி
சிவகாமசுந்தரியாய்
இனியவரம் பெற்று
இடமணைத்த உமையே

பெயர் பொருத்தம்
உயிர்ப்பொருத்தமாய் உறவிட

தேன்பிரிய தித்திப்புடன்
தேவதை ஆசீர்வாதங்களுடன்
தேன்நிலா மகிழ்வாடும்
அன்பினிய ஆதூரங்களே
தாய்மொழித் தமிழின்
கவித்துவ அடையாளங்களே

இன்றென பொங்கும் இன்பம்
இதய இமைநிறைய
வாரிசு பிரியங்களுடன்

வாழ்க நீவீர் வசந்தபல்லாண்டு
வானவில் சந்தோஷமணைத்து

ஆயிரம்பிறைகண்ட அற்புதப் பெருவாழ்வு

இனிய வாழ்த்துக்கள் சகோ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..