Tuesday 29 September 2015

ரத்தம் சுண்டிய முதுமை

ஏய்யா சாப்பிடு

வேணாம்டி

இந்தாய்யா
சாப்பிட்டு தொலை

அபத்தானே
நானும் நாலு பருக்கை
வாயிலே போட முடியுமென

வைது வைது வாயில
ஊட்டுவ
நான் பசியாறிய பின்னு
தான் உணவுண்ணும்
தாய்க் கிழவி

ஆண்டவனும்
ஆத்தாளும்

அவ உருவத்தில்
ஆவிபுகுந்து
வெகுநாளாச்சு போல

வேகப்போற காலத்துல தான்
வெட்டிபுழப்பு கட்டைக்கு புரியுது

பொண்டாட்டி அருமைய
உணர்ந்து மனம் கதறும்
பொன்னுசாமியா..

பாரினில் பல
ரத்தம் சுண்டிய முதுமை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..