Tuesday 16 June 2015

ஆளுமைமரணம்


வீதியெங்கும் இரைந்து கிடக்கிறது
அவரை வழியனுப்பி வைத்த பூக்கள்

தூக்கிசுமந்தோர் அமைதியாக செல்ல
பின் தொடர்ந்த சிலரில்

அதற்குள்ளா
அற்தமானவராச்சே ...

குணமிருந்தாலும்
குறையுடையவராச்சே

நோயில் பாயில் படுக்கவைக்காமல்
அழைத்து போய்விட்டான்...

என்றே
தனக்கறிந்த அவரைபற்றி
பிதற்றி செல்ல

துணை நடக்கும்
அனைவர் மனதிலும்
அனுமதியில்லா பீதியாய்
ஏறி சிம்மாசனமிடுகிறது

நமக்கு எப்போ ??

கேள்விக் குறியுடன்
பாசக் கயிறு தேவனின்

அச்சுறுத்தும்
ஆளுமைமரணம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..