Tuesday 30 June 2015

இனிய வாழ்த்துக்கள் ..இளம்குருத்துகளே

நேச விதைநெல்லெடுத்து
நெகிழ்ந்த பிரியங்கள் கோர்த்து

நெஞ்சுநிறை அன்பேந்தி
அன்றில்பறவை விருப்பங்களுடன்

காதல் மனமணைத்து

ஆனந்த மணநாள் கண்டு
மகிழ்வுறும் ...அன்பிற்கினிய மணமக்களே

அன்புத்தோழியர் Poomalai Haldoraiஅவர்தம்
இளைய மகன்&மருமகளே

அழகும் அழகும் ஆலிலையில் பிரியமேந்தி
ஆண்டவன் இட்ட உயிர்முடிச்சாய்
அமிர்தவாழ்வு காணும்..நீங்கள்

வாழ்வெனும் வசந்தவான் பிரியத்தில்
வண்ணமிகு வானவில்லாய்...ஒருவருக்கொருவர்
வளைநாண் வளைந்து

விட்டுக் கொடுத்தலில் வீடுபேறு கண்டு
எண்ணம் செயல்சிந்தைகளில்
ஒத்த கருத்தினிமையாய் கைகோர்த்து

மங்கல செழுமைகளை மகிழம்பூ மணமாய்
வரும் வாழ்வுதடமெங்கும் தளிர்பூ பரப்பி

பதினாறுவகை பேறுடன்.....
வாழையடி வம்சக் குருத்துக்கள் கண்டு

வானத்து தெய்வங்கள் போட்டிபோட்டு ஆசீர்வதிக்க
தேவாதி தேவர்கள் பன்னீர் மழைத்தூவ
தேவதைக் கொஞ்சலுடன் ..தித்திக்கும் மனமேந்தி
தெவிட்டாத வசந்தவாழ்வு வாழ

நான் வணங்கும் அன்னை வணங்கி

அல்லிமலர்செண்டெடுத்து..
அறுவகை நறுமண மலர் நிறைத்து
ஆனந்த மனம் கொண்டு

கவிநிறை மொழி தொடுத்து வாழ்த்துகிறேன்

வாழ்க வாழிய மணமக்கள் வாழிய வாழிய

ஆயிரம் பிறைகண்ட ..அற்புத பெருவாழ்வு

இனிய வாழ்த்துக்கள் ..இளம்குருத்துகளே
 — with Poomalai Haldorai.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..