Tuesday 16 June 2015

தேனினிமை நாதமே

தேனினிமை நாதமே
தேவ இனிமை கீதமே

மலரும் மனம் தரும் மலர்ப்பாதமே
மங்கலப் பூ சுகந்தமாய் வந்த திருப்பாதமே

சக்திதரும் ஜீவ ஒளிப்பாதமே
கருணைகனிவான அன்புப்பாதமே

அன்னமயின் திருமேனி அங்கியாய் வந்த
அன்னையெனும் தவப்பதமே,...தாய்மைப்பாதமே

என்றும் நின் ஒளித்திருவடிகள் சரணம் சரணம் பரிபூரணசரணம் பெரும்நிறையே...

ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே..!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..