Thursday 25 June 2015

மரமென உயிரென

வந்தமர்ந்தவர்கள்
நேரம் முடிந்து கிளம்பி விட

தனித்துவிடப்பட்ட
மரமும் பலகையும்
நகராத நட்பு ஆகின

குருவிக்காதல் மரம் செப்ப
தேகமனித மோதலை சிலேடையாய்
பலகை சொல்ல

குலுங்கி சிரித்த மரத்திலிருந்து
குதித்து வந்தமர்ந்தன
ஆயுள் பழுத்த முதுமை இலைகள்

கிளையுதிர் இலை
உன்னில் பாலையெனில்

காலடி கரையான்
என்னின் உயிர்வதை
நிதர்சனம் செப்பியது
உளுத்துபோகும் கட்டை

அருகருகே இருப்பாதல்
தான் நட்பானோம் என்று
அவைகள் நம்ப..........

இருக்கிறது..நடுவாய்..இருவருக்கும்
எங்கோ ஒரு மரச்சீவலே பலகையாகும்
ஆதி அந்த சொந்தம்

சுயம்பென எவருமில்லாமல்

தொடர்போடு தொடர்பு வைத்தே
மரமென உயிரென
மதமென....மனிதமென ....

இங்கு
அணு பிரிக்கிறான்

ஆதிகாட்டுப் பிரம்மன்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..