Friday 19 June 2015

அவனிவந்த அமைதி மீட்சியே

ஆயிரம் நிலவு சூழ் அன்புப் பேரொளியாய்
அவனிவந்த அமைதி மீட்சியே

வளரும் மனம் வாடாமல் காக்கும்
வசந்தபேரெழிலே

குழந்தைஉள்ளங்களை சாந்தப் படுத்தி
சந்தோஷங்கள் தரும் சந்தன தருவே

உயிரே வாழ்வே உயிர்வாழ்வின் உயரிய தவமே
பொன்னே பூவே பொன்பூங்கனலே

அழகே அற்புதமே..அழகற்புத அமிர்தமே

அன்னையே அருளே அன்னைஅருள் ஆனந்தமே

தாயென உன்னை வணங்கி கொஞ்சி
நினைந்து வாழ்ந்து நித்தம் நிமிடம் கடக்கிறோம் ,,மா
உம் திருவடிப் பாதையில்

ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே !!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..