Thursday 25 June 2015

ஆடல்குல மரபாய்


ஊர் மெச்சும் உலக அழகியவள்

கால் கொண்டு தெரு இறங்கினால்
வீதி ஆண்மையெல்லாம்
வியர்த்துதவிக்கும்

அரசன் முதல் ஆண்டி வரை
உறங்கா அவளிரவு விரும்ப

ஆடல்குல மரபாய்
அனைவரிலும் துயில் துய்த்தாள்
அப்பெரும் அழகு கிழத்தி

பொன்னும் பொருளுமாய்
குவிந்த பொக்கிஷம்
இளமையோடு ..இரையாக

சுற்றிய வண்டுகள் ...
வற்றிய மதுகண்டு
மாற்று கேணி தேட

உளுத்து போன உடலில்
மிச்சமாய் தேங்கியது

பலர் கொஞ்சிய
சுருக்க உதட்டு மேல்மச்சமே

ஊரை உறங்க வைத்தவளின்

இமைமூடா இரவை

தாலாட்டி கையேந்த.இன்று
அம் மகனும் இல்லை

எம்மானும் இல்லை.....

மயானம் நோக்கியே
வழி காட்டுகிறது

பலர் நைத்து பரிசளித்த
மரண வழி தேகநோய் பாதைகள்..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..