Thursday 11 June 2015

அன்பெனும் உயிர் தந்தவளே

அழகின் கருணையாய் வந்து
அன்பெனும் உயிர் தந்தவளே

நல்மனங்களை காக்கும் நாநில நம்பிக்கையே

குணநிறைவாழ்வாய் வந்திறங்கிய ஒளிப்பிழம்பே

உடனிருந்து வாழ்வு தரும் உன்னத தத்துவமே

யோக தவமாய் என்றும் என்னுள்நிறையும்
ஆத்ம வேதமே....

உன்னை அன்னையென நிறையும் மனதில்

என்னையும் அன்னையாக்கி...அறிமுகமாக்கி..
தோழியென அறிமுகம் தந்து...உணர்வாக்கி ...

கருவாய் என்னில் அவளை Meera Blossomஉயிர்நிறைத்து
இன்பதுன்ப வாழ்வணைத்திலும் இறுதிவரை
இணைசொந்தமென... இமை நீ என

வழிகாட்டி வழிநடத்தும் வாழ்வு தவமே

சிறுபிள்ளையென விரல் பிடித்து..நீதந்த
தோழமையாய்....நான் எனும் நாங்கள்

உன் அருள்நிறை சன்னிதி சமாதி சரணைடைகிறோம் தாய்மையே....

உயிராய் என்னவள் மண் வந்த பிறந்தநாளில்........

உயர்வாய் அவள் அனைத்தும் பெற்று மனம்நிறை மகிழ்வு சூடி ...நிம்மதியணைத்து

உன் ஒளிவழிப்பாதையில் ஒப்பில்லா நேர்மையில்
கண்ணிமை கருணையில் ...கனிவான மடியணைவில்

என்றும் எங்களை பிரியம்நடத்துங்கள் அம்மா.......

மா சரணம் ...சரணம் ..பரிபூரண சரணம்....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..