Thursday 11 June 2015

உயிர் நித்திலமே !!

முத்தமிட்டு முன்னேறு
பின்னிருந்து பிள்ளையாடு

நாள் அலைந்த .. அனலை
நடுசாமத்தில் உள்வாங்கு

விட்டுக்கொடுத்தலாய்
வீடுபேறு காண்

கொள்கலனாகி கொல்

முந்தானைப் பாதையிட்டு
முகிழ்த்து

முத்தத்தில்
நீயில்லா உலகம் சமை

மொத்தத்தில்
வேறில்லாமல் வேரோடி

நித்தம் புரட்டி புதுபித்து

புது இன்ப இயலாடு டி

உயிர் நித்திலமே !!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..