Monday 2 March 2015

மகரந்த பேரழகியடி நீ

தொட்டால் சிணுங்கி
தொடர்ந்தால் பயந்து

உணர்வு கொம்பு
நீட்டி மொட்டு விட்டு

நீள் இரவு விழித்து

ஊரடங்கும் பொழுதில்
ஒருவருமறியால்

மச்சான் மார்படங்கி
வெட்க கூடு உடைக்கும்

மழைநத்தைப்பூ
மகரந்த பேரழகியடி நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..