Monday 2 March 2015

அன்பின் அடையாளமே போற்றி

கனிவின் ஆளுமையாய் வந்த
கனிந்த அன்பின் அடையாளமே போற்றி

அம்மா என்றழைக்க ஓடி வந்து
அணைத்து வருடும் தாய்மை சொரூபமே போற்றி

எது நடந்தாலும் எப்படியிருந்தாலும் நீ என் பிள்ளை
நான் உன் தாய்...என்னிடம் வா உனக்கென நானிருக்கிறேன்
என்று நேர்மைவழி தரும் நெகிழ்வின் மனமே

உலக உயிர்களின் ஒப்பில்லா தாய்மையே....

என்றும் நின்வேத பாதம் சரணம் சரணம் பரபிரம்மமே

ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..