மீட்டெடுத்து
மீள் பிறவி தந்தேன்
பிறவி நேர்மையில்லா
பித்தலாட்டமாய்
சறுக்கினாய்....
உன்
சொல்லும் செயலுமே
காரணியாய் உனை கவிழ்த்த
தாங்கிய நிலம் மிதித்தே
ஆர்ப்பரிக்கிறாய்...
தன் தவறெதுவென
யோசிக்க மறந்து....
புரிதலில் நான்
உன்னை மிஞ்சியவள்
என்று புரிந்தும்
தடம் வந்து மொழியாடி
பழி ருசிக்கிறாய்...
அரைகுறையாய் தின்பதில்
எப்போதும் நீ
அவசரப்பிள்ளையே....
என்றேனும் நேரம் கிடைத்தால்
எல்லாம் அடங்கிய
அமைதியில்...உன்னை
தனிமைக்கூறு போட்டு
விசுவாசமாய்... யோசி
அமிர்தம் மரணம் தருமா ????
மீள் பிறவி தந்தேன்
பிறவி நேர்மையில்லா
பித்தலாட்டமாய்
சறுக்கினாய்....
உன்
சொல்லும் செயலுமே
காரணியாய் உனை கவிழ்த்த
தாங்கிய நிலம் மிதித்தே
ஆர்ப்பரிக்கிறாய்...
தன் தவறெதுவென
யோசிக்க மறந்து....
புரிதலில் நான்
உன்னை மிஞ்சியவள்
என்று புரிந்தும்
தடம் வந்து மொழியாடி
பழி ருசிக்கிறாய்...
அரைகுறையாய் தின்பதில்
எப்போதும் நீ
அவசரப்பிள்ளையே....
என்றேனும் நேரம் கிடைத்தால்
எல்லாம் அடங்கிய
அமைதியில்...உன்னை
தனிமைக்கூறு போட்டு
விசுவாசமாய்... யோசி
அமிர்தம் மரணம் தருமா ????
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..