Saturday 25 July 2015

pushpaanjali


அதிமன ஒளியாய் வந்தமர்ந்த வாழ்வினிமைக்கு அரளிப்பூக்கள்

அன்பெனும் பேரெழிலாய்
ஆனந்தம் நிறையும் கருணைக்கு மல்லிகை

அவனிபிறந்த உயிர்களை
அணைத்து காக்கும் மேன்மைக்கு காகித மலர்கள்

சோதனைகள் வந்தபோதும்
உடன் நின்று வெற்றி தரும்
வேதத்திற்கு மஞ்சள் கொத்து மலர்கள்

மன தைரியத்திற்கு எருக்கம் பூக்கள்

சஞ்சல மனம் சமாதானமாக
வெள்ளை கொத்து பூக்கள்

சச்சரவுகள் நீங்க கொடிரோஸ்
ஆழ் மனம் அமைதியுற செம்பருத்தி பூக்கள்

உடல் நலம் காக்க பூவரசம் பூக்கள்

நீடித்த வாழ்விற்கு நித்தியகல்யாணி

மண்பூத்த மலரணைத்தும்
மாதா உன் பாதங்களில்
கருணை சமர்ப்பணம்

காத்தருள்வாய் தேவமே...

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..