Monday 6 July 2015

கனவெனவே நினைவுறைந்தாள்

அதிகாலை கனவில்
அம்மா வந்தாள்

பிடித்த பந்து முல்லை
பாச மல்லி தொடுத்த பூ எடுத்து

வழக்கம்போலான
வாழ்வியல் தடங்களுடன்

எப்போதும் போல்
எல்லாம் சொல்ல

பொறுமையாய் புலம்பல் கேட்டு
புன்னகையோடு தவறு சுட்டினாள்

போ ம்மா நீஎப்போதும்
என்னை தவறென்பாய்
என்றே சிணுங்க

இழுத்து கட்டி சிரித்து
நானில்லாது யார் சொல்வார்
நல்வழியென்றாய்....

மெல்ல வந்த
வெளிச்சத்தில்
அவள் உரு மங்க

போகிறாயா....
கேட்கும் முன்
வியர்த்து விழித்தேன்

போகவில்லை
கனவெனவே
நினைவுறைந்தாள்

இன்று முழுவதும்
என்னுடனே....!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..