Saturday 25 July 2015

”””பாகுபலி ”””........சிலிர்க்க வைக்கும் கம்பீரத்திமிர்



”””பாகுபலி ”””........சிலிர்க்க வைக்கும் கம்பீரத்திமிர்
******************************************************************************

மனித பலத்தை மண்ணோர்க்கு சொல்லும்
வியத்தகு .....வீர எழுச்சி

படத்தின் பலமே .......திரிசூல வியூகமாய்

இயக்கம் ..ஒளிப்பதிவு.....நடிப்பெனும்
மும்முனை தாக்குதலாய்.......
பிரமாண்டமெழுப்பி ....சிலிர்த்து
நுனி சீட்டு அமரவைக்கிறது

வீர குல மற மக்களை

இயக்கம்...
****************
இதிகாசங்களும்..புராணங்களும்...வீரர்களும்
மாடமாளிகைகளும்...மன்னர்களும்...அமைச்சுகளும்
செங்கோல் ஆட்சியுமாய்...மனக் கண்முன் நடமாட விட்டு...........
படம் அல்ல இஃது.....பாடம் சொல்லும் நம் வரலாற்று மிச்சம் என நேர்த்தியமைச்சு இருக்கிறார்..இயக்குநர் ராஜமெளலி....எந்த ஒரு காட்சியிலும் தன்னில் தானே சமனாகாமல்...மிஞ்சவே நினைத்து சாதிச்சும் இருக்கிறார்............

எம் மண்ணிலும்..எம் வரலாறு வாழ்ந்த அடையாளம் காட்ட..இருக்கிறார்...ஒருவர் என்னும் நீங்கா கல்வெட்டாய்......நீர்

ஒளிப்பதிவு
******************
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியா...இத்தனை எழுச்சியாய்...எழில் ஒளிர்வாய் .....கொஞ்சும் பிள்ளை அழகாய்....வழியவிட முடியுமா...........அருகிருந்து பார்த்த போது ....பயமுறுத்திய அழகு இங்கு எப்படி இத்தனை பாசம் கொஞ்சுது...சபாஷ் செந்தில் குமார்

அழகை அழகுற,,,அதனினும் எழிலுற

வீரத்தை மாண்புற....விழிகளில் மேன்மையுற
இரத்தமும் சதையுமான ...வீர மற போர்களத்தை
கலிங்கத்துப்பரணியின் களமென

இயக்குனரின் வலக்கரமாய்...வந்தமைகிறது
முத்தென ஒளிரும் மூன்றாம் கண்
ஒளி வழி ஒலியாளுகிறார் ,,செந்தில்

நடிகர்கள்
**************
ரம்யாகிருஷ்ணன்...சிவகாமி நாச்சியாய்....நீலாம்பரிக்கு மீண்டும் ஓர் மணிமகுடம் ...விழிதெறிக்கும் அனலோடு
வீர விளைநில ராஜ மாதாவாய்...

சத்யராஜ்...கட்டப்பாவாக.......விசுவாச வீர தளபதியாக
வாழ்ந்திருக்கிறார்,,,,தன் அடையாளங்களை தள்ளி வைத்து...........20 ஆண்டுக்கு முன் வரும் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் இளமைப் படுத்தியிருக்கலாம்
நம் திமிரோனை

நாசர்,,,,வழக்கம் போல் ...அரசாளும் சூட்சிவியூகம் அட்டகாச அசால்டாக

பிரபாஸ்.........பாகுபலி.........ஹீரோ......
மண் வாழ்ந்த மற வீரனுக்கோர்
மன்னனுக்கோர் அடையாளமாய்....
தீரனுக்கோர் ..வீரமும் கனிவும் நெஞ்சுரமும்...எம் ராஜராஜன் இப்படித்தான் இங்கு தஞ்சையாண்டிருப்பானோ என் றே வலியுறுத்துகிறார்

ராணா,,,,,,,,,,,,எதிராளும் வீரத்திமிர்...........சுத்த வீரனும் தோல்வியாள்கிறான் ..பதவியெனும் பேராசை பிடியில்
என்பதற்கோர் அடையாளம்

தமன்னா.........அட டா மழைக்கு ஆடிய அழகியா..இத்தனை பேரழகியா மாறிடுச்சு
அட டா

பனியும் பொன்னும் குழைத்து வழித்த தேகமாய்
மின்னுது தக தக நு.....அம்மிணி...கனமான குரலில் கோபம் கொல்லும் விழியும் ..பேரழகு

காலகேயராக ..பிரபாகர்....
பிணந்திண்னி அரக்க வம்ச ஆளுமையாய்

இசையாய்..மரகதமணி..வசனமாய்..மதன் கார்க்கி...கிராபிக்ஸா...ஸ்ரீநிவாசன்.....செட்டிங்க்ஸ் ஆ..சாபுசிரில்......என
எல்லோரும் வாழ்ந்திருக்கிறார்கள் ..கதையோடு..கதை மிஞ்சாமல்..இயக்கநர் வழிதரும் வலியோடு

பாகுபலி...என்றேனும் குரல் எழும்போதெல்லாம்
உதிரம் சூடேற்றி புல்லரிக்க வைக்கிறார் ..இயக்குநர்

வியக்கவைப்பது பிரமாண்டமும்..பிண்ணனி இசை..ஒளிப்பதிவு எனில்

சிலிர்க்க வைக்கிரது....இயல்பாய் இதயம் எகிர வைக்கும் வீரமும் துணிச்சலும்

படம் முடிந்தது...என்று...விளக்குகள் போட்டபின்னும்
அவ்வளவு தானா...முதல் பார்ட்டா.....இன்னும் இருக்கா
இரண்டாவது இடைவேளையா ...

என்று எழ விடாமல் சீட்டில் மக்களை அமர வைத்திருப்பது ....மகத்தான சாதனை வெற்றி

சரித்திரங்கள் என்பதே நீண்ட வாழ்வியல் தானே
அடக்கிவிட முடியுமா வெறும் 180 நிமிடங்களில்

நீண்ட நாள் பின் தியேட்டரில் 3மணி நேரம் ...வர மனமில்லாமல் ...வசித்த அனுபவம்

பிரமாண்ட சாதனை வெற்றி....

இந்தியனின் வாழ்வடையாள கம்பீரத்திமிர் ....பாகுபலி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..