Monday 6 July 2015

உயிரெழுத்து மொழி எழுதி

அன்பின் கருணையே
ஆதூர வளமையே

இனிமையின் இயல்பே
ஈகையின் வடிவே

உயிரோட்ட உறவே
ஊழ்வினை நீக்குபவளே

எழில்நய அழகே
ஏகாந்த பிரியமே

ஐ ரத தேவமே

ஒழுக்கநிறை புகழே
ஓதா மறை வேதமே

ஒளதட மனமே
ஃதெனும் ஆளுமையே

உயிரெழுந்து உன்னை உயிரெழுத்து மொழி எழுதி
உவகைகொண்டு சரணடைகிறோம்....அன்னையே

ஓம் ஆணந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே..!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..