Monday 6 July 2015

புஷ்பாஞ்சலி

அற்புத பேரருளாய் அவனி வந்த
அவதார மீட்சிகளுக்கு அரளிப்பூக்கள்

கனிவின் பிரியமேந்தி காத்தருளின்
கருணையாய் வந்தணைக்கு வடிஉருக்களுக்கு
காகித மலர்கள்

தெய்வீக அருளொளி பரப்பி மனது நிறையும்
மகத்துவ தவங்களுக்கு மல்லிகை

உள்மன மலர்ச்சி தந்து உவகை சந்தோஷமாய்
நிம்மதிநிறை அன்பிற்கு நித்தியகல்யாணி

உடல்நலம் காக்கும் உயிரோட்ட வாழ்யோகத்திற்கு
பூவரசம் பூக்கள்

போற்றுவோர் போற்ற...தூற்றுவோர் தூற்ற
எதுவரினும் என்னிடம் ஒப்படைத்து
சரணடை.. என்றே ..சத்யவழி தந்து உடன் வரும்
தேவமைக்கு ...பலவண்ண செம்பருத்தி

மலர்கள் அனைத்தும் ஆனந்த சரணம்
சமர்ப்பணம் தாய்திரு உருக்களே

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..