Wednesday 1 July 2015

புஷ்பாஞ்சலி

*

சக்திஒளிர் நிறைக்கு சிவப்பு ரோஜாக்கள்

விசாலமன மகிழ்வுக்கு மல்லிகை

விருப்ப முன்னேற்றங்களுக்கு இளம்சிவப்பு ரோஜாக்கள்

ஆழ்ந்த தவவலிமைக்கு தாமரை

வெற்றிதரும் பிரியத்திற்கு மஞ்சள் சாமந்தி

ஒளிசூழ் சுபிட்சதினமாய் ஒருங்கிணைந்த
நிலாப் பெளர்ணமியான .....இன்று

ஒருமுகமாய் புவியிறங்கி
தாய்முககனிவாய் காத்தருளும் தவமேன்மையே

உன்வடிதிருப் பாதங்களில்.....
ஆன்ம சரணம்...சமர்ப்பணம்............அன்னையே

ஓம் ஆனந்தமயி,...சைத்தன்யமயி சத்யமயி பரமே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..