Thursday 9 July 2015

அமைதியின் யோகமே

ஊன் உருக ..உயிர் உருக
உயர்வு தரும் தியான வேள்வியே

நம்பிக்கை பற்றுதலாய் உடன் பற்ற
நல்வாழ்வு தரும் நாநில நன்மையே

ஆறுதல் பிரியமாய் வந்தணைக்கும்
அமைதியின் யோகமே

உலக சேமத்திற்காக ..ஒளிசூழ் தியான கோளாமாய்
வழியெழெழுந்து வழிகாட்டும்

ஸ்ரீ அன்னை அடிக்கல் நாட்டிய
ஆரோவில் எனும் அற்புதமே

நின் பொழுது கருணையில்
நித்தம் மனம் உருகி..உள இறை காண்கிறோம்

ஓம் மாத்ரேய நமஹ.....ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..