Saturday 25 July 2015

உயிர்சுனை தித்திப்புகள்


அழைத்தேன் வந்தாய்
அருகழைத்து தேன் தந்தாய்

விடியும் வரை
விரல் கோர்த்து கதைத்தாய்

மூக்கு நெற்றி
இமை இதழ் என
இடை கட்டி முத்தமிட்டாய்

கேட்கவந்த கேள்வியெல்லாம்
மறந்து போக

சொல்லவந்ததை
மிச்சம் விடாமல்
மொத்தம் சொன்னாய்

ப்ரியமயாய் ப்ரியம் நுகர

செவிகதவு தட்டும் பறவையொலி
விடியல் அறிவிக்க

கனவென நீ
கலைகிறாய் மெல்ல

மெல்லின மேனியெங்கும்
விரவிக் கிடக்கிறது

வல்லினம் தொட்டாடிய
உன்
உயிர்சுனை தித்திப்புகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..