Thursday 30 July 2015

தவறு தான்..............தப்பு இல்லை

தவறு தான்..............தப்பு இல்லை

தீர்ப்பு நியாயமானது எனினும்
தண்டணை யோசிக்க வைக்கிறது

வெளி இருப்பவர்கள் எவரும்
உத்தமரில்லை எனும் போது
தவிர்த்திருக்கலாம் .....
ஓர் சாதனைப் பெண்மைணியின்
அரசியல் முடக்கத்தை....

தனிஒரு மனுசியாய்.....
எதிர்படும் வல்லூறுகள்
எதிர்த்து மோதி தப்பித்து

எஃகின் தன்மையாய் இறுகி
இரும்பு மனிதமாய் உருவான பெண்மை

முதல் வெற்றி போதையில்....

பசித்தவனுக்கு கிடைத்த
அமுத ஆளுமையில்
பதறி உண்டதே......
கீழ் சிந்தி மேல் வழிந்து ....
விலங்கிட்டது...இன்று

எதிரிகளும்..வியக்கும் துணிச்சலில்
எள்ளி நகையாடிய போதும் கலங்காமல்

சீர் கொண்டு வீறு எழுந்த பெண்மை

பிறக்கும் போது அறிந்தோமா..?
வளரும் போது உணர்ந்தோமா..?

வாழ வாழ தானே
அனுபவம் சொல்கிறது வாழ்க்கையை

அம்மு அம்மு என்று
அறிந்தோர் கொஞ்ச

அம்மா அம்மா என்று
தெரிந்தோர் கெஞ்ச....

பெண்சிங்கமாய் தன்னை தானே
சிலை வடித்துக் கொண்ட ..பேரழகு சிற்பி

நடுநிலையாளன் பார்வையில்

விடுதலை என்பது வெற்றியுமில்லை
தண்டனை என்பது வீழ்ச்சியுமில்லை
எனும் பக்குவத்தை ..நிச்சயம்
நிதர்சனம் உணர்ந்திருப்பார்கள்

போராட்ட வாழ்வை விரும்பி
தோள் அணைத்தவர்கள்

துணிவில்..அறிவில்..
அழகில் ..ஆளுமையில்

தனக்கென தனியிடம் எடுத்து
பெண்மையின் முன்னோடியாய்
திகழ்ந்த முதன்மையே

சவாலை சாதனையாக்கும்
சரித்திரமே....

இஃதும்
உம் மானுடப்பிறவியில்
இன்னுமோர் மைல்கல்லே....!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..