Thursday 9 July 2015

உயிரோசை சப்தம்

சிணுங்க தருவாள்
அம்மா
சிரிக்க தருவார்
அப்பா

எப்போதும் தருவாள்
அக்கா
எடுத்தால் தருவான்
அண்ணன்

கடித்து தருவான்
தம்பி
கனி வாய் தருவாள்
தங்கை

நடுங்கி தருவாள்
பாட்டி
நரைமீசை உரச தருவார்
தாத்தா

சுவைக்க தருவாள்
மனைவி
சுகந்தமாய் தருவாள்
மகள்

இதழ் இரண்டு
வழி உமிழ் ஒன்றெனினும்

வேறுபாடே இருக்கிறது
வெகுண்டெழும் பிரியம் வழியும்

உயிரோசை சப்தத்தில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..