Wednesday 8 April 2015

நேசக்கிழத்தி

ஒய்யார உயரம்
ஊற்று பதநீர்

சுற்றி
குழைத்து
சுண்ணாம்பிட

உயிர் மயக்கும் கள்

தளிர் நுனி முதல்
கிழங்கான் அடிவரை

பதம் தரும்
பனை போல்

பருவத்திமிர் கொழிப்பான
நேசக்கிழத்தி

என்னவள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..