Tuesday 28 April 2015

காலப் பெண்மை அடையாளமே

கடைசிவரை வருவேன்
என கை பிடித்தவர்

காலனோடு போக

ஒருகையில் மகளோடு
மறுகையில் கனிவெடுத்து

கல்வியோடு ஒழுக்கம்
சொல்லித் தந்து

இளமை தீயை.....
தனிமையாய்..வென்று

அறிவு விழுதுகளாய்
குழந்தைவேர் பரப்பிய

பள்ளிகூட பத்மா டீச்சர்

கன்னிமேரியான
காலப் பெண்மை அடையாளமே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..