Tuesday 28 April 2015

அன்பின் அண்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பாச நேசங்களை ....
பவித்ர பிரியமாய் குழைத்து
பாரிஜாத மனமேந்தி
பாங்குடன் அழகு மிளிரும் ....

தாய்மை செறிவான

அன்பின் அண்ணிக்கு ............. Uma Rani
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பெருந்தன்மையும் பெரும்பாசமும் கொண்டு
எவரிடமும் குறைகாணாது
எல்லோரையும் பிள்ளையென

நீங்கள் இமையணக்க....

உங்களை தன் இடபாகமாய் தத்தெடுத்து தாங்குகிறார்
எங்கள் அண்ணாச்சி....
குழந்தை புன்னைகயும்....குவிந்த பெண்மைஎழில் நயமும்
கொண்ட உங்கள்முகம் பார்த்து சென்றாலே போதும்

கவலையும் துன்பமும் ..நின்ற இடம் தெரியாமல் ஓடி
மங்கலமும் செல்வமும் மனதோடு நிம்மதியாய் வந்து தங்கும்

நிறைபாசம் ...நிறைநிம்மதி ...நிறை அன்பு
நிறைகுணம் கொண்டு நிறைசெல்வமாய் நின்று வாழும்
எங்கள் கோவில்பட்டி அழகுபதுமை அடையாளமே

எங்க அண்ணாச்சியின் வெற்றி வாழ்வின் வெளிச்ச ரகசியமே

நேரில்பார்த்து கட்டிகொள்ளாவிடினும்....அன்புவார்த்தை எழுத்து பரிமாறலலிலே...பேசாமல் உணரவைப்பீர்கள்

அன்னைவீடு ஒன்று ..ஓசூரில் எனக்கு இருக்கும் நம்பிக்கையை...நெகிழ்கிறேன்முகமறியா அந்த நேசத்தில் நானும் உங்கள் சொந்த ஈரமணைக்க

அனைவரையும் அணைத்து செல்லும் அன்பு குலமகளே

மங்கலம் தங்கிதளும்பிவழியும் முகம் தாங்கிய தாய்மையே

என்றும் என்றென்றும் ...எங்கள் அண்ணாச்சியுடனும்
எங்கள் வம்ச செல்வ வாரிசு மருமகள்களுடனும்....

நம்ம ஊர் செண்பகவல்லியம்மன் பூவனநாதன் அருளுடன்
திருவிழா பிரியங்கள் கோர்த்து தித்திப்பு இனிமை வாழ்வு வாழ

நான் வணங்கும் அன்னை வேண்டி வாழ்த்துகிறேன்
அண்ணியாரே

உலகை நின்று வாழும் வாழவைக்கும் தாய்மையாய்
வாழ்க வாழ்க ...வாழிய நீங்கள் பல்லாண்டு..!!!!!!!!!

இனிய வாழ்த்துக்கள் அண்ணி heart emoticon heart emoticon heart emoticon
 — withMeera Blossomஇரா. குமார்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..